Connect with us

டிவி

பிக்பாஸ் சீசன் 4.. அம்மா செண்டிமென்ட்டை தொடங்கி வைத்த அனிதா சம்பத்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ல் அம்மா செண்டிமென்ட்டை தொடங்கி வைத்துள்ளார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு போட்டி என்றாலும் அதில் பங்கேற்க வருபவர்கள் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கச்சி போன்ற செண்டிமெண்ட்களில் சிக்கிக்கொள்வது ஏன் என்ற கேள்வி எழுவதுண்டு.

மேலும் இப்படி பிக்பாஸ் வீட்டில் உறவு முறைகளைக் கொண்டாடத் தொடங்கி, அதுவே நாளடைவில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில், நேற்றைய நிகழ்ச்சியில் இடையில் முடிந்த விளையாட்டின் தொடர்ச்சியாக உள்ளது. அதில் நிஷா தனது அம்மா போல இருப்பதாகக் கூறும் அனிதா சம்பத், எனது அம்மா கருப்பாக இருப்பார். அதனால் எனது பள்ளி காலம் முதல் எந்த ஒரு நிகழ்வுகள் என்றாலும் அவர் வர மாட்டார். தான் கருப்பு என்ற தாழ்வுமனப்பான்மைக்குள் கூனிக்குறுகி இருப்பார்.

ஆனால் நிஷா அக்கா, தான் கருப்பாக இருப்பதையும், பாசிடிவாக எடுத்துக்கொண்டு, நகைச்சுவை கலாட்டா என்று சந்தோஷமாக இருக்கிறார். இவரைப் பார்த்து எனது அம்மாவும் மாற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசி கண்ணீர் விட, நிஷா அவரை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் அரங்கேறியுள்ளன.

வரும் நாட்களில் போட்டிக்கு வந்த இவர்கள் பந்த பாசங்களை உருவாக்காமல், தங்களை எப்படி முன்னிறுத்தி வெல்லப்போகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் சென்ற சீசன் போல தொய்வில்லாமல் நிகழ்ச்சி செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?