இந்தியா
ரத்தாகிறது ஆட்டோ டெபிட் சேவை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ டெபிட் சேவை விரைவில் ரத்தாக உள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகள் உள்ளனர்.
கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் ஆட்டோ டெபிட் சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுமதி அளித்திருந்தது. இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாகவே சென்று விடும். இதனால் சேவைகள் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ஒரு சேவையை தொடங்கும் போது அந்த சேவையில் உள்ள ஆட்டோடெபிட் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ சேவை ஆன் செய்யப் பட்டிருக்கும். அதை வாடிக்கையாளர் கவனிக்காமல் இருந்தால் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் பணம் சென்று கொண்டே இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஆட்டோடெபிட் சேவைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 5000 ரூபாய்க்கு குறைவான ஆட்டோ டெபிட் சேவை என்றால் வாடிக்கையாளர்களிடம் மெசேஜ் அனுப்பி அனுமதி கேட்க வேண்டும் என்றும் 5000 ரூபாய்க்கு அதிகமான ஆட்டோ டெபிட் சேவை என்றால் ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பி, வாடிக்கையாளர்களின் அனுமதி பெற்ற பிறகே வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்த தொழில்நுட்பத்தை அமைக்க வங்கிகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு கொடுத்துள்ளது அதன்பிறகு ஆட்டோ சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.