Connect with us

இந்தியா

ரத்தாகிறது ஆட்டோ டெபிட் சேவை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Published

on

வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்டோ டெபிட் சேவை விரைவில் ரத்தாக உள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிகள் உள்ளனர்.

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் ஆட்டோ டெபிட் சேவைக்கு ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுமதி அளித்திருந்தது. இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாகவே சென்று விடும். இதனால் சேவைகள் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சேவையை தொடங்கும் போது அந்த சேவையில் உள்ள ஆட்டோடெபிட் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ சேவை ஆன் செய்யப் பட்டிருக்கும். அதை வாடிக்கையாளர் கவனிக்காமல் இருந்தால் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் பணம் சென்று கொண்டே இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஆட்டோடெபிட் சேவைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 5000 ரூபாய்க்கு குறைவான ஆட்டோ டெபிட் சேவை என்றால் வாடிக்கையாளர்களிடம் மெசேஜ் அனுப்பி அனுமதி கேட்க வேண்டும் என்றும் 5000 ரூபாய்க்கு அதிகமான ஆட்டோ டெபிட் சேவை என்றால் ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பி, வாடிக்கையாளர்களின் அனுமதி பெற்ற பிறகே வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்த தொழில்நுட்பத்தை அமைக்க வங்கிகளுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு கொடுத்துள்ளது அதன்பிறகு ஆட்டோ சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?