கிரிக்கெட்
பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.. புரிந்த சாதனைகள் என்னென்ன?

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் எடுத்து இருந்தது.
பின்னர் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் துவங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் ஷார்மா இருவரும் சதம் அடித்தனர்.
இந்நிலையில் இந்தப் போட்டியின் போது நடைபெற்ற சாதனைகள் பற்றி இங்குப் பார்க்கலாம். ரோகித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்துள்ளார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா வேகமாக இந்த இலக்கினை எட்டியதில் 5 இடத்தினைப் பிடித்துள்ளார். ஆம்லா 150 போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இந்தியர்களுக்கு இடையில் வீராட் கோஹ்லி, கங்குலியை அடுத்து ரோகித் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்கார்களாக இறங்கி 210 எடுத்த இரண்டாம் ஜோடி என்ற சாதனையினை ரோகித், தவான் கூட்டணி படைத்துள்ளது. இதற்கு முன்பு விராத் மற்றும் ரஹானே கூட்டணி 213 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
ஒரு நாள் போட்டிகளில் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்ட்டுல்கரை அடுத்து அதிகச் செஞ்சுரி எடுத்த வீரராக ரோகித்(19) உள்ளார்.
நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 14 சதங்கள் அடித்துள்ள யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி இடது கை பேட்ஸ்மேஙளில் இரண்டாம் அதிகச் சதம் அடித்த வீரராகத் தவான் சாதனை புரிந்துள்ளார்.
ஐசிசி சாம்ப்பியன்ஸ் ட்ரோப்பி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் குறைந்தது இரண்டு செஞ்சுரி அடித்த சாதனையும் தவான் செய்துள்ளார்.
ஆசிய கோப்பைகளில் ரோகித் – தவான் இணை 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. துவக்க ஆட்டக்கார்களாக இருவரும் 3,846 ரன்களை இந்திய அணிகளுக்காக அளித்துள்ளனர். 2013-ம் ஆண்டு 178 ரன்கள் பெற்றதே இவர்கள் இணையின் அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்தப் போட்டியில் 210 ரன் எடுத்துள்ளனர்.
தோணியை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் ஷர்மாவிற்குக் கிடைத்துள்ளது. ரோகித் – தவான் இணை 13 வது முறையாகச் செஞ்சிரிகளை அடித்துள்ளனர். அதிகபட்சமாக 21 எனச் சச்சின் – கங்குலி இணை கூட்டணி உள்ளது.



















