கிரிக்கெட்
நூலிழையில் டிரா செய்த இங்கிலாந்து: ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் மட்டுமே எடுத்ததால் வெற்றிபெற 388 என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஒரே ஒரு விக்கெட்டில் அதாவது நூலிழையில் தோல்வியை தவிர்த்து போட்டியை டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 4 போட்டிகளின் முடிவில் 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளதை அடுத்து அந்த அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 14ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



















