Connect with us

தமிழ்நாடு

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்.. நீதிபதிகள் கேள்வி!

Published

on

அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசுக்கு எதிரான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பருவ தேர்வுகள், இறுதி ஆண்டு மாணவர்களை தவிரப் பிறருக்கு ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ உடன் கலந்தாலோசிக்காத தமிழக அரசு, இந்த பேரிடர் கால தேர்வு ரத்து விதிமுறையானது அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அண்ணா பலகலைக்கழகம், ஏஐசிடிஇ கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதை அடுத்து தமிழக அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம். அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பட்டடை எடுக்க முடியாது. ஏற்கனவே பொறியியல் படித்த மாணவர்கள் வேலையில்லாமல் உணவு டெலிவரி வரை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 20-ம் தேதி வரை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?