தமிழ்நாடு
விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ் சமர்ப்பிப்பு: டி.என்.பி.எஸ்.சியில் புதிய நடைமுறை!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி புதிய நடைமுறை அமல் படுத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது எந்த விதமான சான்றிதழும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை இருந்தது.
ஆனால் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றுகளையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றுகளை பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்வுக்குப் பின் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார் .
விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் பதிவு செய்தவர்கள் அதில் திருத்தம் செய்யவும் அவகாசம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி விண்ணப்பிக்கும் போதே சான்றிதழை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை பல்வேறு முறைகேடுகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.