Connect with us

தமிழ்நாடு

வாக்களிக்கும்போது ரசிகர்கள் தள்ளுமுள்ளு: அட்வைஸ் செய்த அஜித்

Published

on

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் சென்னையில் தல அஜித் தனது மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தல அஜித் வாக்களிக்க வரும் போது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வாக்களிக்க வருவார் என்பதை எதிர்பார்த்து ஏற்கனவே இன்று காலை 6 மணி முதலே ரசிகர்கள் குவிந்தனர். அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்த போது அவருடன் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார்.

அதேபோல் அவர் வரிசையில் நின்ற போதும், வாக்களிக்கும்போது பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் அவரை புகைப்படம் எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறினார். பொது இடத்தில் யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று அவர் அட்வைஸ் கூறிய காட்சிகளின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகிய இருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு வீட்டுக்கு கிளம்பி செல்லும் வரை காவல்துறையினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அஜித் வாக்குச்சாவடிக்கு வந்தது முதல் அவர் கிளம்பும் வரை ரசிகர்கள் பின் தொடர்ந்து விடாமல் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?