இந்தியா
ஏர் டாக்சியில் பறக்கத் தயாராயிட்டீங்களா? – வானமே நெடுஞ்சாலை

இந்தியாவின் பெரு நகரங்களில் வீட்டை விட்டு சாலையில் இறங்கினால் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகும் நிலை இனி ஏற்படாது. இதற்கெல்லாம் தீர்வாக வானமென்னும் சாலையிலே ஏர் டாக்சியிலே சுகமாக பறந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நேரத்தில் சென்றுவிடலாம்.
கனவுகளெல்லம் நிஜமாகின. 2026ல் இந்த புதிய போக்குவரத்து சேவை இதுவரை குறிப்பிட்ட தூரத்தை கடக்க எடுத்த நேரத்தை இனிமேல் நிமிடங்களில் சென்றடைய வைக்கப் போகிறது.
இந்தியாவில் பெங்களுரு மும்பை மற்றும் டெல்லி ஆகிய பெருநகரங்களில் மட்டும் முதற்கட்டமாக தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக ஏர் டாக்சி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இதில் பெங்களுருவைச் சேர்ந்த சார்லா ஏவியேஷன் என்ற நிறுவனம் சோதனைகளை தொடங்கிவிட்டது.
மேலும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2026ம் ஆண்டில் டெல்லி முமபை மற்றும் புனே நகரங்களில் ஏர்டாக்சி சோதனைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஆர்செர் ஏவியேஷனுடன் இணைந்து விரைவில் இச்சேவையை வணிக ரீதியாக தொடங்க இருக்கிறது.
அதானி நிறுவனம் இதற்கான கட்டமைப்பு மற்றம் முனையங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த ஏர்டாக்சிகள் செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் முடியும். இவை மின்சாரத்தில் இயங்குவதால் குறைவான இரைச்சலே இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. சரக்குப் போக்குவரத்தையும் மேற்கொள்ள முடியும்.
ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த “இ பிளான்“ கம்பெனி இதற்கான வேலைகளை செய்கிறது. சென்னையில் 2028ல் வணிக ரீதியாக இது செயல்படத் துவங்கும்.
















