Connect with us

உலகம்

நியூசிலாந்தில் புயலை தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

Published

on

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

#image_title

நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் வரலாறு காணாத பேய் மழை பெய்து ஏராளமான வீடுகள், சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் ‘கேப்ரியல்’ என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த பயங்கர புயலால் ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

மணிக்கு பல மைல் வேகத்தில் சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து, பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

#image_title

இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்தது. இந்நிலையில் தொடர் சோகமாக நியூசிலாந்தின் லோயர் ஹட் பகுதியில் இருந்து வடகிழக்கே 78 கி.மீ. தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?