Connect with us

தமிழ்நாடு

தினமும் உல்லாசம், 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த வாலிபர்!

Published

on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#image_title

12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பாதிக்கப்பட்ட சிறுமி குடும்ப சூழல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளரின் மகன் 27 வயதான கதிரேசனுக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கதிரேசன் அந்த சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று கணவன், மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தினமும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வீட்டை விட்டு வெளியேறிய கதிரேசன் திரும்பி அங்கு வரவே இல்லை.

இதனையடுத்து அந்த சிறுமி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை போக்சோ பிரிவின் கீழ் வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கதிரேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?