உலகம்
டுவிட்டர் இறந்து கொண்டிருக்கின்றது, அதிரடி மாற்றம் தேவை: எலான் மாஸ்க்
டுவிட்டர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்றும் அதனை உயிர்ப்பிக்க அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரின் சில குறிப்பிட்ட பங்குகளை எலான்மாஸ்க் பெற்று உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் நிர்வாக குழுவின் உறுப்பினராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக டுவிட்டர் இறந்து கொண்டிருக்கிறது என்றும் அதை உயிர்ப்பிக்க அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக ஒரு டுவிட் கூட செய்யவில்லை என்றும் இதற்கு காரணம் குறைந்த அளவில் மட்டும் வார்த்தைகளை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதுதான் என்றும் அதற்கும் ஒரு மாற்றம் வேண்டும் என்று எலான் மாஸ்க் கூறியுள்ளார்.
டுவிட்டரில் எடிட் பட்டன் தேவையா என்ற கருத்து கணிப்புக்க்கு பெரும்பாலோர் ஆம் என்று கூறி உள்ளதால் ப்ளூடிக் உள்ளவர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறி உள்ளார்.
மேலும் தற்போது குறைந்த அளவு மட்டுமே வார்த்தைகள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் அதிக அளவு வார்த்தைகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் போன்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் எலான் மஸ்க் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.