Connect with us

இந்தியா

வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ விதிகளை மீறி வசூல் செய்த ரூ.300 கோடி: அதிர்ச்சி தகவல்

Published

on

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம், பண பரிவர்த்தனை கட்டணம், ரயில் டிக்கெட் புக்கிங், மொபைல் போன் ரீசார்ஜ் போன்றவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து நீண்ட நாட்களாகவே புகார்கள் பெறப்பட்டு வருகின்றன

மேலும் சேவை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே போய் வீணாக பண இழப்பும் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப அபராதத் தொகையை வசூலிக்கின்றன

இந்த நிலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பணியாளர்களால் வங்கிகள் குறிப்பிடும் அளவுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு வங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்கள் வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஆக மாறினார்கள்

ஆனால் இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் என்ற பெயரில் ஏதாவது தொகையை வங்கிகள் வசூலித்துக் கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் 45 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்-இல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ 17 ரூபாய் 70 காசுகள் கட்டணம் வசூலித்து உள்ளது. இவ்வாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையில்லாமல் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 12 கோடி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோன்று இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல கோடி ரூபாயை வசூலித்து விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 minutes ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்8 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
komora hiperbaryczna – skutki uboczne. Böylece kalıcı hesap silme işlemlerinin büyük kısmı halledilmiş olacaktır.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.