உலகம்
குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதே போன்று பிற நாடுகளில் இருந்தும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சில நாட்கள் பிறகு, மிண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இது குறித்த ஆய்வை உலக சுகாதார மைப்பு செய்து வருவதாகம், மருத்துவர்களுடன் விவாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


















