இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

- இஸ்ரேலை சேர்ந்த காக்னைட், செப்டியர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன உளவுக் கருவிகளை வாங்கி இந்திய மக்களின் செல்போன்களை மோடி அரசு உளவு பார்ப்பதாக இங்கிலாந்து ”Financial Times” என்ற பத்திரிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
- ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- நேபாள பேரழிவு பலி எண்ணிக்கை 1,132 பேரை கடந்தது; 7 நாட்களாகியும் மாயமான 4,462 பேர் குறித்து துப்பு கிடைக்கவில்லை: 11 சுரங்கங்களில் சிக்கிய 400 பேரை மீட்கப் போராடும் ராணுவம்
- தமிழ்நாட்டில் நாளை முதல் ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.35க்கு 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும்.
- பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பியதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் எஸ்வி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பரிகாரம் தேட முடியாது. – ஐகோர்ட் கிளை.
- வாக்கு எண்ணிக்கைக்கு “டோட்டலைசர்“ கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து “டோட்லைசர்“ கருவி மூலம் எண்ணலாம்.
- அமெரிக்கத் தொழிலதிபரும், உலகின் முதன்மை செல்வந்தருமாகிய ஈலோன் மஸ்க், எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி பற்றிக் கணிப்பொன்றைக் கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், ஒரு ரோபோவின் உழைப்பும் செயல்திறனும் மனிதனை விட 5 மடங்கு அதிகமாக இருக்குமென்றும் கணித்துள்ளார். மேலும்; ரோபோக்களே பிற ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்குவதன் மூலம், அதன் வளர்ச்சி மிகப் பெரிய அளவிலும், பின்னர் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் அதிகரிக்கும் என்றும், ஈலோன் மஸ்க் தனது கணிப்பைத் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியில், 74 வயதான பெண் ஒருவர் அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் 74 வயதில் குழந்தைகளைப் பெற்றெடுத்த உலகின் வயதான பெண்களில் ஒருவராக குறித்த பெண் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- டெல்லி, சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடிக்க செய்து சோதனை நடத்த ஒன்றிய அரசு முடிவு. டெல்லி போபால் கொல்கத்தா நகரங்களிலும் சோதனை நடத்தப் போவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல். இந்த சோதனைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு












