இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.08.2026

- மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி கற்றுக்கொள்ள ஓராண்டு கால அவகாசம்: முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவிப்பு
- செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க திமுக அரசால் வழங்கப்பட்ட பணி ஆணை தவெக அரசு ரத்து செய்த்து.!
- அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதி தொடர்பான பகுதிகளை நீக்க இமாச்சலப் பிரதேசம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை பொருந்தும் என்றும், கல்லூரி விவரப் பிரசுரங்களிலும் இது சேர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார். இருப்பினும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடரும். தங்கள் சமூகப் பிரிவு தொடர்பான சலுகைகளைக் கோரும் மாணவர்கள், தேவைப்படும்போது சாதி விவரங்களைத் தனியாக வழங்க வேண்டும்.
- பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை நீக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்ற கிளை
- தெலங்கானா: 1983ல் பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி, அரசுப்பள்ளி ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி பணியில் இருந்த போது நல்லாசிரியர் விருதினையும் பெற்றுள்ளார்.
- திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீக்க வேண்டும்.”- சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மனு தாக்கல்
- நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 538 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு வரும் Foreign Tourists, இனி Indian Bank Account இல்லாமலேயே தங்களது நாட்டின் eligible Banking அல்லது Payment App மூலம் Bank of Baroda UPI Global QR Code-ஐ scan செய்து இந்தியாவில் பணம் செலுத்தலாம். இதனால் Cash, Currency Exchange சிரமங்கள் குறையும்












