இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.06.2026

- கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் ஒன்றிய கல்வி அமைச்சர் விலகக் கோரும் ஜந்தர் மந்தர் போராட்டம் இன்ற 12வது நாளாக தொடர்கிறது.
- கரூர் அதிமுக எம்எல்ஏ திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற காலியிடம் 7 ஆக உயர்ந்தது.
- ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களுரு இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்குவதற்கான முதல் கட்ட களப்பணிகள் தொடங்கி உள்ளன.
- உலகம் முழுதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளே அதிகம் இறப்பதால் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உலக சுகாதார நிறுவுனம் அறிவுறுத்தல்.
- அனுமதியின்றி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிகிச்சையை வீடியோ அல்லது ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது
- சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் இந்தியாவின் முதல் கடல்சார் ஏற்றுமதி மையங்களை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் திருவள்ளுர் விழுப்புரம் தஞ்சாவூர் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தீவன ஆலைகள் பதப்படுத்தும் நிலையங்கள் குளிர்பதன கிடங்குகள் மற்றும் சரக்கு கையாளும் மையங்களுடன் அமைக்கவிருக்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.32000 கோடி மதிப்பிலான கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
- 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். வாகன ஆர்.சி.ரத்து செய்யப்படுவதோடு அவர்களுக்கு 25 வயது வரை உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
- தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும். – சி.ஆர்.பாட்டீல் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர்.

















