இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

- சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுவதால் மே2 முதல் மறு உத்திரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்க்க்கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு.
- இந்தியாவில் ஆண்களிடையே வாய்ப்புற்று நோய் பாதிப்ப தொடர்ந்து அதிகரித்து வருவதாக ICMR நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல். மது அருந்துதால் புகைப்பழக்கம் உள்ளிட்டவை காரணமாக ஆண்களிடையே வாய்ப்புற்றுநோய் பாதிப்பு ஆண்டுக்கு 1.20 % அதிகரித்து வருவதாகவும் 2024ம் ஆண்டில் மட்டும் 11.3 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டதாக தெரிவிப்பு.
- மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்றுவரும் 2ம் கட்ட வாக்குப்பதிவ முடிந்த பிறகு 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்ற மாலை வெளியாகிறது.
- எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வழிவகை செய்ய 1989 இந்திய மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தங்களை முன்மொழிந்தது ஒன்றிய அரசு. எரிபொருள்களின் தர நிர்ணய விதிகளில் E10 என இருந்ததை E20 வரை உயர்த்தியும் அதிகபட்ச அளவை E85 என இருந்ததை E100 என மாற்றியும் வரைவு வெளியீடு.
- மகாராஷ்டிராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் – மே1 முதல் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு சோதனையில் ஈடுபட குழு அமைத்தது அம்மாநில அரசு. மராத்தி தெரியாத ஓட்டுநர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். எனவும் அறிவிப்பு.
- 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து நேர்ந்தால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25000 அபராதம். மேலும் அந்த சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிம்ம் வழங்கப்படமாட்டாது. காவல்துறை எச்சரிக்கை.
- லாரியில் எளிதாக ஏற்றிச் செல்லக்கூடிய சிறிய வகை அணு உலை முன்மாதிரியை சோதனை செய்து வரும் சீனா. 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யம் திறனுடைய இது வெற்றி பெற்றால் நடுத்தர அளவிலான AI Data Centre-கள் தொலைதூர பகுதிகள் பேரிடர் காலங்களில் மின்சாரம்“ வழங்க பெரிதும் உதவும் எனக் கூறப்படுகிறது.








