இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

- பிரிட்டனில் ஜனவரி 1 2009 க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.
- நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்புதிவும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலு ஒரே கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.
- மிக்த துல்லியமான புகைப்படங்களை உருவாக்க ஏதுவாக ChatGPT Images 2.0 என்ற பதிய பதிப்பை வெளியிட்டது. Open AI. இந்த புதிய அப்டேட் மூலம் அறிவியல் லரைபடங்கள் Chart-கள் சிக்கலான Layout-கள் உள்ளிட்டவை உருவாக்க முடியம் என்றும் பயனர்கள் கொடுக்கும் தகவல்களை முன்பை விட இன்னும் சிறப்பாகப் புரிந்துகொண்டு செயல்படும் என்றும் அறிவிப்பு.
- தமிழ்நாடு முழுவதும் 75064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி. தற்போதுவரை தமிழ்நாடு முழுதும் 4.18 லட்சம் தபால் வாக்குகள் வந்து சேர்ந்துள்ளன. தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும் பாதுகாப்பு பணியில் 83000 பேரும் ஈடுபட்டுள்ளனர். – அர்ச்சனா பட்நாயக்.
- டீ உள்ளிட்ட பல உணவுகளில் சேர்க்கப்படும் மூலிகையான அஸ்வகந்தாவை பொறுத்தவரை அதன் வேர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இலைகளை பயன்படுத்தவே கூடாது என்றம் எணவுப் பாதகாப்ப அதிகாரிகள் இதனை கண்காணித்த உறுதிப்படுத்த வெண்டம் என்றும் இந்திய உணவு பாதுகாப்ப அமைப்பான FSSAI உத்தரவிட்டுள்ளது. அஸ்வகந்தா இலைகளில் உள்ள வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்பு மற்றம் நரம்பியல் பாதிப்புள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
- வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை – அர்ச்சனா பட்நாயக்





