வணிகம்
இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.1000 இலிருந்து ரூ.2500 ஆக உயர வாய்ப்பு!

தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீதம் தொகை பணி நிவாரண நிதி (PF) கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் நலனுக்காக டெபாசிட் செய்கிறது. அந்த தொகையில் ஒரு பகுதி பிஎப் (PF) கணக்கிற்கும், மற்றொரு பகுதி ஊழியர் ஓய்வூதிய திட்டமான இபிஎஸ் (EPS) கணக்கிற்கும் செல்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு பிஎஃப் வழியாக ஒரு பெரிய தொகையைப் பெறுவதோடு, இபிஎஸ் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தையும் பெறுகின்றனர். தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்த தொகையை நீண்டகாலமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், மத்திய அரசு இதை பரிசீலித்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இபிஎப்ஓ (EPFO) அமைப்பு இபிஎஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து விரிவான விவாதம் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள இபிஎப்ஓ அறங்காவலர் குழு கூட்டத்தில் இடம்பெறவுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















