ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்கும் மருந்தால் பார்வை குறையுமா? டாக்டர் எச்சரிக்கை!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
உடல் பருமனைக் குறைக்க விரும்பும் பலரும், டயட், உடற்பயிற்சி தவிர, மருந்துகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமான, அமெரிக்காவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Semaglutide மருந்துகள் (பிராண்டுகள்: Wegovy, Ozempic) எடையை குறைக்கும் மருந்தாக உள்ளது.
இந்த மருந்துகள் பசியை குறைத்து, எடையை 3 மாதத்தில் 5-6 கிலோ வரை குறைக்க உதவலாம். ஆனால், இதனை நிறுத்தியவுடன் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்தியாவில் இதன் மாத செலவு ரூ.30,000 முதல் 40,000 வரை இருக்கும்.
சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த மருந்தை தொடர்ந்து எடுத்தால் பார்வை குறைவடையும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக NAION (Non-arteritic anterior ischemic optic neuropathy) என்ற கண் நரம்பு நோய் ஏற்பட்டு, பார்வை திடீரென குறையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
டயாபெட்டிக் ரெட்டினோபதி உள்ளவர்களுக்கு இந்த மருந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். மருந்து எடுத்தவர்களுக்கு இது 3-4 மடங்கு அதிக அபாயம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் என்ன சொல்கிறார்?
உடல் எடையை குறைக்க விரும்பினால், மாவுச்சத்து குறைந்த உணவுகள், ஒழுங்கான உடற்பயிற்சி போன்ற இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க, shortcut தேடி மருந்துகளை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு மோசமானது என அவர் எச்சரித்துள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.



















