சினிமா
“கொட்டுக்காளி’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு மிக அருகில்” – சூரியின் உருக்கமான பதிவு!

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ், இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.
‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் மற்றும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்துள்ளார், இது தமிழில் அவருடைய முதல் படம்.

இந்த மாதம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சூரி ‘பாண்டி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரியின் முந்தைய படங்கள் ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச அளவில் பெரிதும் பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சூரி, “‘கொட்டுக்காளி’ ஒரு Mainstream Content Oriented திரைப்படம். இதில் வரும் ‘பாண்டி’ எனும் கதாபாத்திரம், எல்லா குடும்பங்களிலும் இருப்பவர் போன்றவர். இந்த சமூகம் கட்டியுள்ள உறவுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் பாண்டி.
இந்த படத்தில் பாண்டியின் மனப் போராட்டத்தை சரியாக பிரதிபலிக்கவேண்டிய நெறியில் கவனமாக இருந்தேன். நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படமாக ‘கொட்டுக்காளி’ இருக்கும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram

















