வணிகம்
8வது ஊதியக் குழு புதிய அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இங்கே!

8th Pay Commission Latest News:
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நீண்டநாள் காத்திருந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில், அமைச்சரவை அதன் Terms of Reference (ToR) எனப்படும் விதிமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி (DA) திருத்தம் பற்றிய பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்பட உள்ளன.
தற்போது நாடு முழுவதும் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்த புதிய ஊதியக் குழுவால் நேரடியாகப் பயன் பெறவுள்ளனர்.
அமலுக்கு வரும் தேதி:
அரசாங்கம் 8வது ஊதியக் குழுவிற்கு தனது அறிக்கையைத் தயாரிக்க 18 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. 10 ஆண்டு விதியின் படி, புதிய ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் நிலுவைத் தொகை வடிவில் பிந்தைய மாதங்களுக்கான அதிகரித்த தொகையையும் பெறுவார்கள்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor):
சம்பள உயர்வில் மிக முக்கியமான பங்காக உள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர், 7வது ஊதியக் குழுவில் 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக் குழுவில் இது 1.92 முதல் 3.0 வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 அல்லது அதற்கு மேல் இருந்தால், சம்பளமும் ஓய்வூதியமும் கணிசமாக உயரும்.
உதாரணம் 1 – ஓய்வூதியம்:
ஒரு ஓய்வூதியதாரரின் தற்போதைய ஓய்வூதியம் ₹25,000 எனில்,
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.0 என்றால் புதிய ஓய்வூதியம் ₹50,000 ஆகும்.
அதாவது ஓய்வூதியம் கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயரும்.
உதாரணம் 2 – சம்பளம்:
ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ₹40,000 என்றால்,
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 → புதிய சம்பளம் ₹1,02,800
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.0 → புதிய சம்பளம் ₹1,20,000
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 → புதிய சம்பளம் ₹1,47,200 வரை உயரும்.
அதாவது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகமானால், சம்பள உயர்வும் அதே அளவில் அதிகமாகும்.
அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதிய உயர்வு:
சம்பளம் அல்லது ஓய்வூதியம் அதிகரிக்கும்போது, அதனுடன் அகவிலைப்படியும் தானாகவே அதிகரிக்கும்.
உதாரணமாக, தற்போதைய ஓய்வூதியம் ₹20,000 மற்றும் DA 20% என்றால், மொத்தம் ₹4,000 கிடைக்கும். ஆனால் புதிய ஓய்வூதியம் ₹30,000 என்றால், DA ₹6,000 ஆக உயரும். இது ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.
முக்கிய தகவல்:
8வது ஊதியக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிடுகிறார்.
பேராசிரியர் புலக் கோஷ் (பகுதி நேர உறுப்பினர்) மற்றும் பங்கஜ் ஜெயின் (செயலாளர்) ஆகியோரும் குழுவில் உள்ளனர்.
கமிஷன் தனது அறிக்கையை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் மன்ஜீத் சிங் படேல், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வுடன், ஓய்வூதிய கம்யுடேஷன் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் CGHS மருத்துவ நலன்களை மேம்படுத்தல் போன்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

















