Connect with us

இந்தியா

3 வேளாண் சட்டங்கள் ரத்தாகிறதா? ஜனாதிபதியை சந்திக்கும் 7 கட்சி தலைவர்கள்!

Published

on

சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும், கடந்த 6 மாதத்திற்கு மேலாக டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது என்பதும் பலகட்ட பேச்சுவார்த்தை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்றபோதும், உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் போராட்டம் நீண்டுகொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வேளாண் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதியிடம் 7 எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். பெகாசஸ் செயலின் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஜனாதிபதியுடன் அறிவுறுத்துமாறு அவர்கள் கூறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பையும் நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டம் அரசியல் சட்டத்தை கடைபிடிக்குமாறு மத்திய அரசுக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள ஏழு அரசியல் கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பிற்கு பின் மூன்று வேளாண் மசோதா ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?