Connect with us

இந்தியா

எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதா?

Published

on

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்.டி.எப்.சி வங்கியின் சுமார் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து வாடிக்கையாளர்களின் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்று வங்கி விளக்கம் அளித்துள்ளது.

எச்.டி.எப்.சி வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் இந்த டேட்டாக்கள் உண்மையானது போல் தெரிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் எச்.டி.எப்.சி வங்கி தங்கள் வங்கியில் இருந்து டேட்டாக்கள் எதுவும் கசியவில்லை என்றும் எங்கள் அமைப்புகள் எதுவும் ஏறப்படவில்லை என்றும் தங்கள் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளன.

எங்கள் அமைப்புகளில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டா பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றும் நாங்கள் தொடர்ந்து டேட்டாக்களை பாதுகாப்பதில் செயல்பட்டு வருகிறோம் என்றும் அங்கு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்களின் முழு பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள் மற்றும் முக்கிய தரவுகள் அடங்கிய தகவல்கள் சைபர் குற்றவாளிகளின் ஹேக்கர் இணையதளத்தில் உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 மார்ச் வரையிலான டேட்டாக்கள் அந்த இணையதளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வங்கி நிர்வாகம் இதனை உறுதியாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கியின் மொபைல் செயல்பாடு மார்ச் 6ஆம் தேதி அன்று திடீரென செயல் இழந்ததாகவும் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்ததாகவும் இதற்கும் அந்த டேட்டாக்கள் கசிவு செய்திக்கு சம்பந்தம் உள்ளதா என வாடிக்கையாளர்கள் தங்களது டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சமீப காலமாக வங்கியின் குறுஞ்செய்திகள் ஸ்பேமாக அதிகரித்து உள்ளது என்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்21 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!