Connect with us

உலகம்

129 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 மாத குழந்தை: துருக்கி பூகம்பத்தில் ஒரு அதிசயம்..!

Published

on

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 25000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் 70,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 129 மணி நேரம் கழித்து இரண்டு மாத குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட ஆச்சரியமான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் பொது மக்களை மீட்க இந்திய தேசிய பேரிடர் மீட்புப்படை உள்பட பல நாட்டு மீட்டுப் படையினர் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் இரண்டு மாத குழந்தை ஒன்று 129 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது குழந்தையின் உடல் சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மாத குழந்தை கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் உணவு இன்றி எப்படி உயிருடன் இருந்தது என்பதை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எல்லாம் கடவுளின் அருள் தான் என்றும் அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

நிலநடுக்கதிற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் பிறகு இரண்டு மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அந்த பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் இரண்டு வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணி பெண் மற்றும் 70 வயது உடைய பெண் ஒருவரும் ஐந்து நாட்களுக்குப் பிறகு ஈடுபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இடிபாடுகளிலிருந்து சிரியா நாட்டில் காப்பாற்றப்பட்டதாகவும் 5 பேர்களும் ஐந்து நாட்கள் இடுப்பாடுகளுக்கு இடையே இருந்த நிலையில் முழு குடும்பமும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் மூன்று குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் நம்பிக்கையுடன் இன்னும் ஏராளமானவர்களை உயிருடன் மீட்கலாம் என மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?