உலகம்
துருக்கி நிலநடுக்கம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்..!

சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்ன துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளதாகவும் 10,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
துருக்கி அதிபர் அந்நாட்டில் உள்ள 10 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதும் உலகில் உள்ள மற்ற நாடுகளின் உதவியோடு மீட்பு பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத குழந்தை ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த குழந்தையை அவர்கள் வெளியே எடுத்து அதன் பின்னர் மருத்துவரின் உதவியாளர் தொப்புள் கொடியை நீக்கியுள்ளனர். அந்த குழந்தையின் முதுகில் காயம் இருந்ததாகவும் முகம் முழுவதும் தூசி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த குழந்தை 35 டிகிரி செல்சியஸில் இருந்ததாகவும் இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும் தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் தாய் இறந்து விட்டதாகவும் ஆனால் குழந்தை மட்டும் அதிசயமாக உயிர் தப்பி உள்ளதாகவும் அந்த குழந்தையை மீட்டெடுத்த மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த குழந்தையின் அப்பா அம்மா யார்? உறவினர்கள் யா? என்று தெரியாத நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
???????? A newborn baby is rescued in Aleppo, Syria. At the time of birth, the mother was under the rubble. She reportedly died after giving birth. pic.twitter.com/7ky2VVDP0J
— Mike (@Doranimated) February 7, 2023





















