சினிமா செய்திகள்
டூபீஸ் போட்டோஷூட் எடுத்தும் கண்டுகொள்ளாத இயக்குனர்கள்: பிரபல நடிகையின் சோகம்!
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த ஒருவர் தற்போது மூன்று வருடங்களாக திரைப்படம் வாய்ப்பு இல்லாமல் உள்ளார். இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபீஸ் காஸ்ட்யூம் உள்பட கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டும் எந்த இயக்குநரும் அவரே கண்டுகொள்ளாமல் இருப்பது அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் முனி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சக்கரகட்டி, பரதேசி, காவியத்தலைவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. கடந்த 2019ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் நடித்த வேதிகா அதன் பிறகு இன்னும் தமிழ் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வேதிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள். இதில் அவர் தனது உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். சமீபத்தில் அவர் டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்த போட்டோஷூட் பதிவு செய்துள்ளார் இருப்பினும் லைட் கூறுகிறதே தவிர அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கடும் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது