வணிகம்
குறை ஓய்வூதியம் 12 ஆண்டுகளாக குறையுமா? SPARSH, OROP, குடும்ப ஓய்வூதிய கோரிக்கைகள் குறித்து முக்கிய தகவல்!

ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள்: ஓய்வூதியத்தில் மாற்றம் வருமா?
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ராணுவ ஓய்வூதியதாரர்கள் சமீபத்தில் தங்கள் முக்கிய கோரிக்கைகளை SCOVA குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளனர். இதில், முக்கியமாக மூன்று முக்கிய கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
🔹 1. குறை ஓய்வூதிய காலத்தை 15 வருடத்திலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க கோரிக்கை:
தற்போது கம்யூடேஷன் ஆஃப் பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்கள் 15 ஆண்டுகளுக்கான தொகையை ஒருமுறையாக பெற்று, அதற்கேற்ப குறை ஓய்வூதியம் பெறுகின்றனர். ஆனால், தற்போது வங்கி வட்டி விகிதங்கள் குறைந்ததால் 15 ஆண்டுகள் என்பது அதிகமாக இருக்கிறது என்பதோடு, இந்த காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
🔹 2. குடும்ப ஓய்வூதியம் பெறும் செயல்முறையை எளிதாக்க வேண்டும்:
ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் ஓய்வூதியத்தைப் பெறும் செயல்முறையில் சிக்கல்கள் நிறைந்துள்ளன. இது குறித்து, ஒரு பொதுவான நடைமுறை (SOP) வகுக்க வேண்டும் என்றும், குடும்பத்தினர் தாமதமின்றி ஓய்வூதியம் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
🔹 3. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கான சவால்கள்:
மற்றொரு முக்கிய கோரிக்கை, வெளிநாடுகளில் வாழும் ஓய்வூதியதாரர்கள் Digital Life Certificate (DLC) சமர்ப்பிக்கும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் இந்திய தூதரகங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது.
🔹 4. SPARSH போர்ட்டல் சிக்கல்கள்:
SPARSH போர்ட்டலுக்கு மாற்றப்பட்ட பிறகு, பல ஓய்வூதியதாரர்கள் பணி தொடக்கம் முதல் ஓய்வூதியம் வரைக்கும் தகவல்கள் முழுமையடையாததால், பணம் கிடைக்காத நிலை உள்ளது. இதனுடன், சரியான நேரத்தில் தொகை வராதது, மாற்றங்கள் செய்ய முடியாதது போன்ற சிக்கல்களும் உள்ளன.
🔹 5. OROP கொள்கை மீதான புதிய நடவடிக்கைகள்:
OROP (One Rank One Pension) தொடர்பான சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களை தீர்க்க புதிய கொள்கை உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. செலவுத் துறையுடனான தனிப்பட்ட ஆலோசனைகள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
🔹 அரசு உறுதி:
இந்த SCOVA கூட்டத்தில் மத்திய அரசு, ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை மிக முக்கியத்துடன் எடுத்துக் கொண்டதாகவும், தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.
















