இந்தியா
எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம்.. வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!
எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம் என வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம். இந்த தகவல்கள் மக்களவையில் வெளியிட்ட தரவுகளின் படி வழங்கப்பட்டுள்ளன.
2011-ம் ஆண்டு 1,22,819 இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
2012-ம் ஆண்டு 1,20,923 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
2013-ம் ஆண்டு 1,31,405 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
2014-ம் ஆண்டு 1,29,328 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
2015-ம் ஆண்டு 1,31,489 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
2016-ம் ஆண்டு 1,41,603 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
2017-ம் ஆண்டு 1,33,049 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
2018-ம் ஆண்டு 1,34,561 நபர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
2019-ம் ஆண்டு 1,44,017 நபர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
2020-ம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் 85,256 நபர்கள் மட்டுமே வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறி இருந்தார்கள்.
2021-ம் ஆண்டு அதுவே 1,63,370 ஆக அதிகரித்தது.
2022-ம் ஆண்டு இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகரித்து 2,25,620 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.
இந்தியா நன்றாக இருந்தால் ஏன் இவ்வளவு பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவில் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகப் பலர் வெளியேறுவதாகவும், பல ஸ்டார்ட்அப் முனைவர்களும் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.