சினிமா
ஆமைக்கு மாலை, கேக்குக்கு பதிலாக பிரியாணி! விஜய் ஆண்டனி எதற்காக இப்படி செய்தார்?
விஜய் ஆண்டனி நடித்துள்ள சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அருவி மற்றும் வாழ் படங்களை எழுதி இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படம் விஜய் ஆண்டனியின் 25வது படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் ஆண்டனியின் 50வது பிறந்த நாள் என்பதால், கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு பதிலாக, பிரியாணி வெட்டிக் கொண்டாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் எல்லா புரோமோஷன்களிலும் ஆமை பொம்மையை வைத்திருந்தார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆமை பொம்மைக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது’ என்ற பழமொழி மூடநம்பிக்கை என்பதை உணர்த்தும் வகையில், ஆமை உருவத்துக்கு மாலை அணிவித்தார்.

ஆமை மீது தேவையில்லாமல் கட்டுக்கதையை கட்டி விட்டுள்ளார்கள் எனவே நான் அதை மாற்றவே இவ்வாறு செய்கிறேன் எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர், எப்போது தான் நீங்கள் செருப்பு அணிவீர்கள் என்று கேட்டதற்கு, செருப்பு இல்லாமல் நடப்பது நன்றாக உள்ளது, நீங்களும் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் எனவும் கூறினார்.

செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் சக்தித் திருமகன் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















