Connect with us

சினிமா செய்திகள்

எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய புலவர் காலமானார்!

Published

on

எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய புலவர் புலமைப்பித்தன் சற்றுமுன் காலமானார். இதனையடுத்து அதிமுகவினர் மற்றும் திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நீதிக்கு தலை வணங்கு, நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், குமரிக்கோட்டம், அடிமைப்பெண், நல்ல நேரம் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

அதுமட்டுமின்றி சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ் உள்பட பல பிரமுகர்களின் திரைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புலவர் புலமைப்பித்தன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.33 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிமுக பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆரின் தீவிர தொண்டனாக இருந்த புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது அரசவை கவிஞராக இருந்தவர் என்பதும் முன்னாள் அதிமுக அவைத் தலைவராக பதவியேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?