சினிமா செய்திகள்
3 வது வாரத்திலும் வலிமைக்கு ஹவுஸ்புல்: மூன்றே நாட்களில் எதற்கும் துணிந்தவன் காலி!
அஜித் நடித்த வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்திலும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது நாளே எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காலியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சனிக்கிழமை சென்னை, மதுரை, கோவை உள்பட பல நகரங்களில் வலிமை திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் கிட்டத்தட்ட ஹவுஸ்புக் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த வியாழன் அன்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நேற்று பெரும்பாலான திரையரங்குகளில் பார்வையாளர்கள் நிரம்ப வில்லை என்றும் ஒரு சில திரையரங்குகளில் பத்துக்கும் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது .
வலிமை திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த போதிலும் அந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் நிரம்பி வழிகின்றனர் என்பதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் தந்த போதிலும் அந்த படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காலியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.