Connect with us

இந்தியா

புத்தாண்டில் சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாப பலி!

Published

on

புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் என்பதும் இந்த கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி கோவிலில் கூடுதலாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் கூட்டம் அதிகமாகி வந்த நிலையில் திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஒரு சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினரும் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினத்தில் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் 12 பேர் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?