Connect with us

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தயார் என சொல்லும் ஸ்டெர்லைட்; ‘ஒண்ணும் வேணாம்’ என தரவுகளை அடுக்கிய வைகோ!

Published

on

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணத்தால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு முறையாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம், ‘இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசைக் காட்டமாக சாடியுள்ளது. 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் காப்பர் உற்பத்தி செய்து வந்து, தற்போது நிறுவனத்தை மூடியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் செய்து தர தயார் எனக் கூறியுள்ளது. 

அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ‘இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது கருத்துகள், ஆங்கில செய்தித்தாளில், விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7,000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2,000 டன் ஆக்கித் தருகின்றது.

இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவுக்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது.

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ஆக்சிஜன் ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36 ஆயிரம் லிட்டர் ஆக்க முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்’ எனக் கூறியுள்ளார். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்20 minutes ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்23 minutes ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்24 minutes ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்27 minutes ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்31 minutes ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்36 minutes ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
aaa mush love. Studio heldens | online marketing webdesign and graphic design. Legia warszawa 1 0 widzew Łódź.