இந்தியா
ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்ட விபத்து. நடிகை ஊர்வசியின் பதிவு என்ன தெரியுமா?
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை தனது தாயாரை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவருடைய தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பிரார்த்தனை’ என்று பதிவு செய்து அதன் கீழே ’ரிஷப் பண்ட்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரிஷப் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறாரா? என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் நடிகை ஊர்வசி தனது பேட்டி ஒன்றில் எனக்கு நிறைய பேர் லவ் ப்ரோபோசல் செய்தார்கள் என்றும் குறிப்பாக ஆர்பி என்பவர் நீண்ட நேரம் ஹோட்டலில் காத்து இருந்தார் என்றும் ஆனால் நான் அவரை பார்க்கவே இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் ஆர்பி என்று குறிப்பிட்டதை ரிஷப் பண்ட்டை தான் என செய்திகள் வைரல் ஆன நிலையில் இதற்கு பதிலடி தந்த ரிஷப் பண்ட், ‘பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் இவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் மட்டும் ஊர்வசி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர் என்பதும் இதனால் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று ஊர்வசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர்வசி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் உணவகம் ஒன்றில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது என்பதும் ஆனால் ரிஷப் அதனை மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.