செய்திகள்
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மகளிர் உரிமைத் தொகை மற்றும் 43 சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்!

15.07.2025 அன்று, தமிழ்நாடு முதல்வர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமை கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி 6 வார்டுகளில் 15.07.2025 அன்று இம்முகாம் தொடங்கப்படும். இதில் 13 அரசு துறைகளின் மூலம் 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கப்படவுள்ளது. இந்த பணிகள் 07.07.2025 அன்று துவங்கப்பட்டு, தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
மேலும், 16.07.2025 அன்று, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், அண்ணாநகர், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களிலும் முகாம் தொடங்கும். இம்முகாமில் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 08.07.2025 முதல் தொடங்கப்படும்.
இந்த முகாம்களில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்து ஒப்புதல் பெறவும் செய்யப்படும். விண்ணப்பங்களின் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், மருத்துவ முகாம்கள் மற்றும் உடல் நல சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.


















