செய்திகள்
“உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 50 லட்சம் விண்ணப்பங்கள் – டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு”!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெரும் வரவேற்பு – 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, டிசம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு!
தமிழக அரசு நடத்திய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு மிகப் பெரிதாக இருந்தது. மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்றன. இவற்றில், நகர்ப்புற மக்கள் 13 துறைகளின் 43 சேவைகளையும், கிராமப்புற மக்கள் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு விடுபட்ட பெண்கள் அதிக அளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். நவம்பர் 15ந்தேதி வரை நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை அரசு தற்போது சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பித்தவர்களின் வருமானக் கட்டணங்கள், முகவரிச் சான்றுகள் உள்ளிட்டவை மிகத் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சரிபார்ப்பு வேலைகள் முடிந்தவுடன், டிசம்பர் முதல் வாரத்தில் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்பதை அரசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தியுள்ளது.
பட்டியல் வெளியானதும், தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகாம் முடிவடைந்த நிலையில், இது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் தெளிவாக கூறவில்லை. எனினும், இந்த செயல்முறையின் மூலம் முன்பு தவறவிட்டவர்களும், நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களும் இப்போது திட்டத்தின் பயனுகளை பெற முடியும்.















