வணிகம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத அகவிலைப்படி நிலுவை தொகை – மே மாத ஊதியத்தில் இணைக்கப்படும்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இந்த மாதம் 4 மாத நிலுவை அகவிலைப்படி தொகை வழங்கப்படும்!
சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எண் 110 விதி கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 2 சதவீதம் உயர்த்தப்படும் என்றும், இந்த உயர்வு கடந்த ஜனவரி 2025 முதல் அமலில் வரும் என்றும் தெரிவித்தார்.
இப்போது, இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரை நிலுவையில் இருந்த 4 மாத அகவிலைப்படி தொகை (DA Arrears), மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடி நன்மை பெறுவார்கள். இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர்களும் இந்த உயர்வின் பலன்களை அனுபவிக்க முடியும்.
















