தமிழ்நாடு
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் பதிவு காலை முதல் தொடங்கியது!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு இன்று முதல் தொடங்கியது.
கல்லூரி கல்வி இயக்குநர் சற்று முன் அறிவித்த அறிவிப்பில் ஜூலை 26 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை முதல் பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்ததையடுத்து நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் B.E., B.Tech படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
மேலும் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.