தமிழ்நாடு
கேரளாவிலிருந்து தமிழகத்தில் கொரோனா பரவலா?- அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கை
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இன்னுமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இன்று சென்னை சைசாப்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
கேரள எல்லையில் இருக்கும் வாழையாறு பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் முழு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துள்ளோம். கோவையை ஒட்டி 13 இடங்களில் கேரள எல்லை இருக்கிறது. அதன் வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்ட பின்னர் தான் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அங்கு மட்டுமல்ல கர்நாடகா மற்றும் பிற மாநில எல்லைகளில் இருக்கும் நுழைவுப் பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட பின்னர் தான் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்றுப் பரவல் தமிழகத்துக்குள் வராது.
இவ்வாறு உத்திரவாதம் கொடுத்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்.