ஆரோக்கியம்
இதனைச் சாப்பிட்டு வந்த உடலில் உள்ள நோய்கள் நீங்கும்!
அகத்திக்கீரை:
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. அகத்திக்கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும். அகத்திக்கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை:
காசினிக்கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிறுபசலைக்கீரை:
சிறுபசலைக்கீரை சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயைக் குணமாக்கும். சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. காலை உணவுகளைத் தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது.
பசலைக்கீரை:
பசலைக்கீரை தசைகளைப் பலமடையச் செய்யும். பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும். தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
கொடிபசலைக்கீரை:
கொடிபசலைக்கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை:
மஞ்சள் கரிசலை கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
குப்பைகீரை:
குப்பைகீரை பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். இந்தக் கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம்.இதனால் எலும்பு குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
அரைக்கீரை:
அரைக்கீரை ஆண்மையை பெருக்கும். அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
புளியங்கீரை:
புளியங்கீரை சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை:
பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவும் பேருதவி புரிகிறது.
பரட்டைக்கீரை:
பரட்டைக்கீரை பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.