Connect with us

பிற விளையாட்டுகள்

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி: தங்கம், வெள்ளி இரண்டும் கிடைக்க வாய்ப்பா?

Published

on

தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு பதக்கம் உறுதி என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர் என்பதும் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் கலந்துகொள்ளும் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவின் இறுதிச் சுற்றில் 3 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். தங்கவேலு மாரியப்பன் வருண்பட்டி மற்றும் ஷரத்குமார் ஆகிய மூவரும் இறுதி சுற்றில் மோதும் 9 வீரர்களில் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் மாரியப்பன், ஷரத்குமார் ஆகிய இருவருக்கும் பதக்கம் உறுதி செய்யப்பட்டதாகவும் இருவரில் தங்கம், வெள்ளி யாருக்கு என்பதில் தான் போட்டியாக உள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க வீரர்கள் சாம் குரூவ், மாரியப்பன், ஷரத்குமார் ஆகிய மூவரில் யாருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற நிலைதான் தற்போது உள்ளது.

மொத்தத்தில் தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்றில் இரண்டு பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இதனை அடுத்து மாரியப்பனுக்கு தங்கம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?