Connect with us

தமிழ்நாடு

சென்னை மக்களே உஷாராக இருங்க: எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!

Published

on

சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்கள் இன்று இரவு உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் சற்று முன்னர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் இன்று இரவு முதல் நாளை காலை வரை உஷாராக இருக்க வேண்டும் என்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த மழை நம்மை ஆச்சரியப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த முறை அரபி கடலில் உண்டான காற்றழுத்தம் கொடுத்த மழையை இந்த மழை நமக்கு கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்பதும் ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என மீண்டும் தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?