Connect with us

தமிழ்நாடு

மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை: நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர்!

Published

on

பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்த எஸ்.,வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சந்திரமணி விசாரித்து வந்த நிலையில் இன்று எஸ்.வி.சேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே மன்னிப்பு கோரியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் ஒருவர் கருத்தை படித்து பார்க்காமல் பகிர்ந்தது தனது தவறுதான் என்றும், அந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கம் இல்லை எனவும் கூறி மன்னிப்பு கேட்பதாகவும், அரசு தரப்பில் விசாரணைக்கு தேவைப்படும் போதெல்லாம் ஆஜராக தயாராக இருப்பதாகவும் எஸ்.வி.,சேகர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நான்கு வழக்கிலும் தனித்தனியாக மன்னிப்பு கடிதத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?