சினிமா செய்திகள்
மீண்டும் தொடங்கும் மாநாடு ஷூட்டிங்.. பரபரப்பாக இயங்கும் சிம்பு!

சிம்பு மாநாடு படப்பிடிப்பு முடிந்து, எப்போது படம் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
ஆனால் சிம்புவோ மாநாடு படத்தை விட்டுவிட்டு, புதிதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். ஈஸ்வரன் படத்தின் ஷீட்டிங்கை 20 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருந்தது.
அதன்படி ஈஸ்வரன் திரைப்படத்தின் ஷூட்டின் செப்டம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி செல்லும் சிம்பு, மாநாடு படப்பிடிப்பில் நவம்பர் 9-ம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளாராம்.
மாநாடு பட ஷூட்டிங்கும் தொடர்ந்து 40 நாட்கள் ஒரே ஷ்ட்யுலாக நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகு 10 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கும் என்றும், அது குறித்து அறிவிப்புகள் பின்னர் வெலியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொன்னபடி மாநாடு ஷூட்டிங் நடைபெற்றால், கோடை விடுமுறையின் போது சிம்புவின் மாநாடு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநாடு திரைப்படம் ஒரு அரசியல் படம் என்பதால், கண்டிப்பாக அரசியல் கலத்திலும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம், பொங்கலுக்குத் திரைக்கு வருவதாக ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் போதே படக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.
இப்படியே சென்றால் 2021-ம் ஆண்டும் சிம்பு நடிப்பில், ஈஸ்வரன், மாநாடு, மகா, கன்னட திரைப்பட ரீமேக் மஃப்டி என 4 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















