Connect with us

தமிழ்நாடு

ஷவர்மா கடைகளுக்கு மூடுவிழா ஆரம்பம்: தொடர்ந்து கிடைக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

Published

on

கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கேரள மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பல கடைகள் இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல இடங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான உள்ளன.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை கள ஆய்வு நடத்தியபோது கெட்டுப்போன 250 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்த இறைச்சிகள் ஷவர்மா கடைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஷவர்மா சாப்பிட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளுக்கும் மூடுவிழா நடத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

கெட்டுப்போன இறைச்சி, குப்பையில் போடும் இறைச்சிகளை ஷவர்மா என்ற பெயரில் 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்று கொள்ளை லாபம் அடிக்கும் ஷவர்மா கடவுளர்களுக்கு முடிவு கட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது.

 

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?