Connect with us

இந்தியா

இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ..

Published

on

பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்ததை அடுத்து இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதால் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர். குறிப்பாக அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பின் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது. இன்று சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்து அதன் பின் கடைசியாக 875 புள்ளிகள் சரிவில் பங்குச்சந்தை சென்செக்ஸ் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#image_title

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பெர்க் அறிக்கைக்கு பின்னர் தான் பங்குச்சந்தையில் 85% வங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள், அந்நிறுவனத்திற்கு கடன் அளித்த வங்கிகளின் பங்குகள் ஆகியவை படு வீழ்ச்சி அடைந்துள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இன்று கிட்டத்தட்ட 59 ஆயிரத்துக்கு சென்செக்ஸ் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 17,600 என்ற புள்ளிகளாக குறைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் என்ன நிலை இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பங்குச் சந்தையில் மிகவும் முக்கிய வர்த்தகமாக கருதப்படும் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மட்டும் நான்கு சதவீதம் சரிந்ததால் அதில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ என ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதானி குழுமத்திற்கு 4500 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ், அதானி வில்மர், அதானி கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் மட்டும் 5 முதல் 25 சதவீதம் வீழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை திண்டாட்டம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்து வங்கிகளின் பங்குகளை வைத்துள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை என்றும் அப்படியே அவர்களுக்கு சிறு நஷ்டம் ஏற்பட்டாலும் அவை விரைவில் மீட்டு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதானி குடும்பத்திற்கு எஸ்பிஐ வங்கி தான் 40 சதவீத கடன் கொடுத்துள்ளன அதேபோல் ஒரு சில தனியார் வங்கிகளும் அதிக அளவு கடன் கொடுத்திருந்ததை அடுத்து எஸ்பிஐ உள்பட வங்கிகளின் பங்குகள் வைத்திருந்தவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பேங்க் நிஃப்டி இன்று ஒரே நாளில் 1300 புள்ளிகளில் இறங்கி உள்ளதை அடுத்து அந்த துறை எந்த அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?