சினிமா
மதுமிதா வெளியேற்றத்தின் வெளிவராத ரகசிய தகவல் இதுதான்!
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் நேற்று அவர் அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவரது வெளியேற்றம் பல்வேறு சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதாக கூறிய தொலைக்காட்சி தரப்பு, அவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது, அவரை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலை என்ன, நடந்தது என்ன என்பது குறித்த எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அதற்கான நிகழ்வையும் ஒளிபரப்பவில்லை.
இந்நிலையில் மதுமிதாவுக்கு நடந்தது என்ன என்பது குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதில், ஹலோ ஆப் புரோமோஷனுக்காக கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் மதுமிதா பேசிய விவகாரம் தான் பிரச்சனைக்கு காரணம். ஆனால் மதுமிதா பேசியது அவ்வளவு பெரிய சர்ச்சைக்குறிய, பிரச்சனைக்குறிய விவகாரம் ஒன்றுமில்லை. ஆனால் மதுமிதா பேசியதை பிக் பாஸில் ஒளிபரப்பவில்லை.
அப்படி அவர் என்ன பேசினார் என்றால், வர்ண பகவான் கர்நாடக காரர் போல அங்கு பெய்த மழை இங்க பெய்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இதான் மதுமிதா பேசியது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இதனை பிரச்சனைக்குறிய ஒன்றாக ஆக்கிவிட்டனர் மற்ற போட்டியாளர்கள். குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் உள்ள ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மற்ற போட்டியாளர்கள் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மற்ற அனைவரும் மதுமிதாவை மிக கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
தொடர்ந்து மதுமிதாவுடன் மொத்த போட்டியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். உனக்கு அறிவு இல்லையா, அப்படி, இப்படி என்று வாய்க்கு வந்தவாறு மதுமிதாவை அனைவரும் கார்னர் செய்துள்ளனர். வாஷ் ரூம் சென்றாலும் அங்கும் விடாமல் அவரை துரத்தி வசை பாடியுள்ளனர் அவர்கள். இதன் பின்னணியில் தான் மதுமிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். ஆனால் மதுமிதாவுக்கு சேரன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவருமே துணையாக இருந்துள்ளனர்.
கமல் ஹாசன் மதுமிதாவின் தற்கொலை முடிவை தவறு என்று சுட்டிக்காட்டினார். ஆனால் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டிய சூழ்நிலை குறித்து ஆராயவில்லை. அதுகுறித்து மற்ற போட்டியாளர்களை கண்டிக்கவில்லை. இது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுதான் மதுமிதா விவகாரத்தில் நடந்ததாக ஹலோ ஆப் தரப்பில் இருந்தும் மற்ற சில வழிகளிலும் தகவலாக வெளியாகி உள்ளது. இந்த தகவல்தான் நமக்கு கிடைத்தது. மற்றபடி காவேரி விவகாரம் குறித்து கூட மதுமிதா பேசவில்லை.