Connect with us

தமிழ்நாடு

சசிகலா நீக்கப்பட்டது செல்லும்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு!

Published

on

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் அதிமுகவின் பொதுசேயலாளர் சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் கடந்த சில வருடங்களாக விசாரணைக்கு வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கோரி சசிகலா அவர்கள் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற மனுவில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொதுச்செயலாளர் உரிமை கோர சசிகலாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவரை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என சசிகலா கூறியுள்ளார்.

 

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?