தமிழ்நாடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாளை மறுவாக்குப் பதிவு என அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்ததை அடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து புகார்கள் எழுந்துள்ள ஐந்து வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த பகுதிகளில் முறைகேடு நடந்துள்ளது என்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இந்தநிலையில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெற வார்டுகள் குறித்த தகவல் இதோ: